முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

மௌனங்கள் கலைகின்றன


நேற்று கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் வித்யாவின் கொடூர கொலைக்கு எதிராக 'நீதி மற்றும் சிறுவர் விவகார அமைச்சின்' ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வினை ஆர்ப்பாட்டம் என்பதை விட கவனயீர்ப்பு அல்லது நினைவுகூரல் நிகழ்வு என்று தான் சொல்ல வேண்டும்.


நேற்றைய தினம்.. நேரம் ஒரு மூன்று மணியிருக்கும் அப்போது தான் எனது கல்லூரியின் பழைய டைரக்டர் செல்லவிருக்கும் ஒரு நிகழ்வு சம்பந்தமாக FBயில் அறிகிறேன். அவர் ஒரு சிங்களவர் எனினும், தமிழர் நலனில் அதிக அக்கறையுள்ளவர். அரசியல் நிலைகள் என்பதினைத் தவிர்த்துப் பார்த்தால் 'ரோசி சேனநாயக' அவர்கள் என்னால் என்றுமே வியந்து பார்க்கப்படும் ஒருவர். அவரது ஆளுமை தன்னம்பிக்கை திடசங்கர்ல்பம் ஒவ்வோர் பெண்களுக்குமே இருந்துவிட்டால் நிச்சயமாக நாம் அரசியலில் முப்பது வீதமென்ன ஐம்பது வீத பிரதிநிதிதுவத்தினை கூட பெற்றுவிட முடியும் என்பது திண்ணம்.

நிற்க, இந்நிகழ்வு சம்பந்தமாக மேலதிக விபரங்களை தமிழ்வின் மூலம் அறிந்து கொண்டதன் பின்னர் புறப்படலாம் என்று முடிவெடுத்து வெளிக்கிடும்போது அம்மா வந்து கேட்டார் எங்கே போகிறேன் என்று. வழமையாய் வீட்டில் யாரும் அப்படி கேட்பதில்லை. ஆர்ப்பாட்டம் என்று சொன்னால் அப்பா நிச்சயமாக விடமாட்டார். அதனால் சற்றே தடுமாற்றதுடன், மீட்டிங் ஒண்டு இருக்கு போய்ட்டு வந்திடுறன், கொஞ்சம் லேட் ஆகும் என்றேன். அம்மா மெல்ல அறைக்குள் வந்து மெதுவான குரலில் "சுதந்திர சதுக்கத்தில வித்தியாவுக்காண்டி எதோ நிகழ்வு நடக்குதாமே போகேல்லையோ..?" எண்டு கேட்டார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

உங்களுக்கு எப்படி..? கேட்கவே தேவையில்லை எனக்கு முன்பு தினமும் ipadல் செய்தி வாசிப்பது அவா தான். ஜெயலலிதாவின் வழக்கு முதல்கொண்டு வித்தியாவின் கொலைவரை அத்தனை செய்திகளும் அவவுக்கு அத்துப்படி. மௌனமாக தலையாட்டினேன். "நானும் வாறன்." மேலும் அதிர்ந்தேன். இதுநாள் வரையில் எந்தவொரு ஆர்ப்பாட்டத்திர்க்குமே அவர்கள் சென்றதில்லை. இன்று என்ன புதிதாய்..? கேட்கவில்லை. "அப்போ ஜனனி?". "அவளையும் கூட்டிக்கொண்டு போகலாம்.." சத்தியமாக நான் இந்த உலகத்தில் தான் இருக்கிறேனா என்றொருதரம் குழப்பமாகிவிட்டது. என்னை நானே கிள்ளிப் பார்க்கும் முன்பே அவரே தொடர்ந்து "ஆனா அப்பாவுக்கு தெரிய வேண்டாம். விடமாட்டார்." என்றார். அப்போதுதான் இது கனவில்லை என்று தெளிந்தேன். 

சரியென்று எல்லோருமாய் புறப்பட்டு நண்பியோருவரின் வீட்டுக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து புறப்படுகையில் ஜனனி கீழே விழுந்து கால் நோகிறது என்றது. தவிர மழையிலும் நன்றாக நனைந்து விட்டதனால் நான் அவர்களை திரும்பி வீட்டுக்கு போகும்படி சொன்னேன். அதற்க்கு அம்மா குளிர் மேலும் ஏறாமல் இருக்க கடையில வேற சொக்ஸ் வாங்கி போட்டிட்டு போகலாம் என்றார். என்னைப் போல் தான் எனது தாயாரும் ஒன்றினை செய்வதென்று முடிவெடுத்துவிட்டால் மாற்றுவது கடினம். ஆனால் இத்தனை வருடங்களில் அவர் என்னிடம் இத்தனை தூரம் அடம்பிடித்ததில்லை. ஒருவழியாக அவர்களை சமரசம் பண்ணி வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் பஸ் ஏறும்போதே மனம் வெறுமையாகிவிட்டது. 

நிகழ்வில் கலந்து கொண்டுகொண்டிருக்கும்போது கூட மனம் இந்த சம்பவத்தையே சுற்றி சுற்றி வந்தது. இது நாள்வரை எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் நடந்திருக்கின்றன. அவை எதற்குமே செல்ல வேண்டும் என்று தோன்றாத போது எதற்காய் இதற்க்கு மட்டும்..? காரணம் வித்தியாவா..? அந்த கொடூர கொலையா..? அல்லது ஆழுமை மிக்க அரசியல்வாதியொருவர் முன்னின்று நிகழ்த்துவதாலா..? அல்லது அவர்களே முன்னின்று நடத்தும் போது நாம் செல்லாமலிருப்பது நியாயமில்லை என்று கருதியதாலா..? அல்லது கடைசியில் சிலர் சொல்லுவது போல் "நோகாமல்(?) எல்லோரும் கலந்துகொள்ளலாம் என்பதனாலா..?"

நேற்றைய நிகழ்வின் பின்னர் FBயில் நான் பகிர்ந்து கொண்ட எனது கீழுள்ள பதிவினைப் பார்த்தால் எதுவென்று உங்களால் நிச்சயமாக புரிந்து கொள்ள முடியும் என நம்புகிறேன். இல்லாவிடின் இதே நிகழ்வுக்கு எனது நண்பியொருவர் நாலேவயதான தனது பையனை கூட கூட்டிவந்திருந்தார். (அவரை அங்கு தான் தற்ச்செயலாக சந்திக்க நேர்ந்தது.) அவரிடம் தான் கேட்க வேண்டும். அவருக்கு நிச்சயமாக எம் அனைவரையும் விட அதிக தெளிவு இருக்கலாம்.
They didn't know her until few days ago.. 
But they came for her..
They didn't know what's written on those posters..
But they hold them for us.. 
Hot wax drops burnt their hands.. 
But they didn't let the wind blow out their lights.. 
They did it silently.. And sent out their message loudly..


They didn't know her until few days ago.. But they came for her.. They didn't know what's written on those...
Posted by Gowri Ananthan on Sunday, 24 May 2015













கருத்துகள்

பிரபலமான இடுகைகள்