• Home
  • About
  • Articles
  • Books
    • Kanavukalaith Thedi
    • Peyarili
    • Testimonies of Silent Pain
    • Reviews
  • Blog
    • Aval Oru Thodar Kathai
    • Bharathi Kannamma
    • Short Stories
    • Others
  • 48HFP
  • Guest Talks

Gowri Ananthan

Writer | Social Entrepreneur | Ambassador of Peace | Counsellor | Psychotherapist | Traveler | FreeThinker

facebook google twitter instagram linkedin

எல்லோரும் எதிரபார்த்த ஒன்றே எனினும் கடைசிநிமிட படபடப்பு/பரபரப்புகளின் மத்தியில் சற்றே சலனம் கொள்ள வைத்த தேர்தல் இது. இறுதி முடிவு பற்றி நான் சொல்வதை விட எமது நண்பர்கள்/நண்பர்களின் வட்டம் சொல்லிய/பகிர்ந்த கருத்துகளிலிருந்து ஒரு சில இன்றைய உங்கள் பார்வைக்கு..



Options
Anuraj Sivarajah
மலர்ந்தது தமிழர் அரசு


Options
Aswin Sutharsan shared Castro Rahul's photo.

பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்..

என்னது 
தமிழீம் கிடைச்சிற்றா??
பரபரப்புக்கு பஞ்சமில்லாத பேப்பர் என்றா அது உதயன் தான்..

என்னது தமிழீம் கிடைச்சிற்றா??


  • Options
    Thivagar Thayaparan
    வடமாகாணசபை தேர்தலில் இம்முறை அனைத்து தமிழ் மக்களும் காட்டியிருக்கும் வாக்களிக்கும் ஆர்வம் பாராடத்தக்களவு வாக்களிப்பு வீதம் என இவ்வளவுக்கு ஒரு பெருவெற்றி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்திருப்பது பாராட்டத்தக்கது...யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி ,வவுனியா, மன்னார் என அனைத்து மக்களின் பங்கும் உண்மையில் பாராட்டத்தக்கது.....

    தாங்களே 20 வருடங்களுக்கு முன்னர் காணிகளை அபகரித்தது விட்டு 20 வருடங்கள் கழித்து அவற்றை தாம் தான் மீட்டுக் கொடுப்பது போல காடியவர்களுக்கும், தாமே அழித்தவற்றை மீண்டும் கட்டி எழுப்புகிறோம், அபிவிருத்தி என்ற பெயரில் செய்து கொண்டிருப்பவர்களுக்கும், இவற்ற்றை எல்லாம் தான் தான்கேட்டு பெற்றுக்கொடுக்கிறேன் என்று சொல்லியே அரசியல் நடத்தும் கட்சிகளுக்கும் அமைச்சர்களுக்கும் தமிழ் மக்கள் கொடுத்திருக்கும் நெத்தியடி தான் இது...

    இப்படி ஒரு வாக்களிப்பு வீதமும் ஆர்வமும் 2010 பாராளுமன்ற தேர்தலில் காட்டப்படிருக்கவில்லை...3 வருடங்களின் பின் காட்டப்படிருப்பதானது அரசாங்கத்தின் மீதான அதிருப்தியையும், இராணுவ அடக்குமுறைகளுக்கு எதிரான மக்களின் மனநிலையுமே காட்டி நிற்கிறது...


  • Options
    Thusyan Thurai Singam
    வரிக்கு வரி விடுதலைப்புலிகளை சொன்னதால் மட்டும் தான் அராஜக அடக்குமுறைகளின் உச்சக்கட்டத்திலும் மக்கள் தைரியமாக ஓட்டுப்போட வந்தார்கள்.. கூட்டமைப்புக்கு புள்ளடி குத்தினார்கள்.

    எத்தனை குழப்பங்கள் செய்தும்.. எந்த குழப்பமும் இல்லாத சனம்.

    உண்மையாகவே ஒரு தமிழீழ பிரஜையாக (தமிழன் என்று சொல்லி இதில் தமிழகத்தவர்களையும் இணைப்பதில் துளியும் உடன்பாடில்லை.. அவர்களால் இப்படி உரிமைக்காக ஓட்டுப்போட முடியாது. இலவசங்களுக்கு ஓட்டுப்போடுபவர்களுக்கு உரிமையின் அருமை எப்படித்தெரியும்) உணர்வதில் அவ்வளவு பூரிப்பாக இருக்கிறது. 

    சர்வஜன வாக்கெடுப்பை நடத்தட்டும்... இத்தனை ஆயுதங்களுடன் சிங்கள இராணுவத்தை உலாவ விடட்டும்... "புலிகள் புலிகள்" என்று முணுமுணுத்தபடி அச்சம் தீர்த்து உரிமை வெறிபிடித்து தமிழீழ அரசை சனம் அமைக்கும்.

    நாங்கள் சலுகைகளுக்கும் இலவசங்களுக்கும் விலைபோகத தமிழீழ மக்கள். எங்களை கட்டியெழுப்பியவர்கள் புலிகள்.

    தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்.



Options
Mynthan Shiva
ஹஹா என்ன ஒரு உன்னதமான காலைப்பொழுது..!!
சிங்கம் ஓங்கி அடிச்சா ஒன்னரை டன் வெயிட் தான்...சிங்கத்துக்கு ஓங்கி அடிச்சிருக்கோம் பாருங்க ஆயிரம் டன் வெயிட்ல...!!!

சும்மா அடியில்ல..நாய் பேய் அடி...!!மரண அடி..!!!இதுக்கு பெயர் பெரும்பான்மை இல்லையோய்..ஒரு சில புல்லுருவிகள்,நாணல்களை தவிர்த்து எப்போதுமே நாம தான்லே கிங்கு..!!

நம்ம வேலைய நாம கரெக்ட்டா பண்ணியாச்சு...எனியாச்சும் நீங்க உருப்படியா ஏதும் பண்ணுங்கடா கூட்டமைப்பு நொண்ணைங்களா..!!!


Options
MaYu VK
தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெறும் என்பது நாம் யாவரும் அறிந்ததே ..ஆனால் தீவகம்,ஊர்காவற்துறை, தொகுதிகளில் சிங்கத்தின் குகைக்குள் சென்று அதன் பிடரியை உலுப்பி அதன் கோட்டையை தகர்த்த பா.கஜதீபன் அண்ணா மாற்றமுடியாத வரலாற்று மாற்றத்தை மாற்றிக்காட்டியிருக்கிறார் ...


Loshan Vaamalosanan
பெருமகிழ்ச்சி, பெருமை, நன்றி, நம்பிக்கை +ஒற்றுமை 
#தேர்தல் #கடமை #எதிர்காலம் #பதில் 
ஒற்றுமையே உறுதியானதும் இறுதியுமானதுமான பலம்



Options
Nirosh C-Town
வந்தால் அலையாய் வருவோம்!!
வீழ்ந்தால் விதையாய் விழ்வோம்!!
மீண்டும் மீண்டும் எழுவோம்!!

Sayanthan Kathir
காயமுற்ற மனதொன்றை ஆற்றுப்படுத்துவதென்பது குண்டும் குழியுமான தெரு ஒன்றைத் தார் இட்டு நிரப்பிச் செப்பனிடுவது போன்றதல்ல.

Thuwaragan Ranganaathen
ஆறிய காயங்கள் சில உண்டு..
ஆறாத காயங்கள் பல உண்டு...
KAAYAM Tamil short film - Jaffna
www.youtube.com
A Tamil Short Film Won 7 Awards in AAA Shortfilm Competition Produced by R.Thuwaragan Direction R.Nishaharan

Like ·  · Share · 2 hours ago · 
Share
Tweet
Pin
Share
No comments
இன்றைய காலகட்டத்தில் பகுத்தறிவுவாதிகள் என்றாலே நாத்திகர்கள் தாம் என்று அடையாள படுத்திவரும் நிலையில் கோவில்கள் கட்டுபவர்கள் எல்லாம் முட்டாள்கள் அல்லது பகுத்தறிவில்லாதவர்கள் என்றொரு கருத்து ஆழமாகப் பதிந்து / பதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஆழ்ந்து நோக்கினால் ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு எந்தளவுக்கு இவை உதவுகின்றனவோ இல்லையோ எமது  கலாச்சாரத்தின் விழுமியங்களாயிருந்து அதனைப் பேணிப் பாதுகாத்து வரும் இடங்களாயிருக்கின்றன என்பது உண்மை.
அல்வை முத்துமாரியம்மன் கோவில்

'தமிழ்நாடு' என்று பெயரிலேயே தமிழை வைத்திருக்கும் ஒரு நாட்டில் (மாநிலத்தில்) சென்னை முதல் கன்னியாகுமரிவரை கிட்டத்தட்ட இருபதுநாள் பயணம் மேட்கொண்டிருந்தபோது கூட  "நான் தமிழன்டா" என்று நினைத்து பெருமைப்பட்ட சந்தர்ப்பங்கள் வெகுசிலவே. மதுரை, சிதம்பரம், மலைக்கோவில், ஸ்ரீரங்கம், திருவெண்ணாமலை, தஞ்சாவூர், கேரள ஸ்ரீ பத்மநாப சுவாமி ஆலயம்,  திருப்பதி போன்ற முப்பதிற்கும் மேலான வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலங்களுக்குச் சென்றிருந்தோம். தஞ்சாவூர் பெரியகோவிலையும் கங்கைகொண்ட சோழபுரத்தையும் பார்க்கையில் சற்றே மலைப்பாகவிருந்தது. ஆனால் இத்தகைய பல அரிய கலைபொக்கிசங்களை அவற்றின் மதிப்புணராது கையாள்வதைப் பார்க்கையில் இதற்க்கு எமது நாடு எவ்வளவோ பரவாயில்லை போல் தோன்றியது.

Methodist Girls High School, PP.
இங்கெல்லாம் பள்ளிக்கூடம் கட்ட உதவுகிறார்களோ இல்லையோ யாராவது கோவில் கட்டப் போகிறோம் / திருத்தப் போகிறோம் என்று கேட்டால் மட்டும் வாரியள்ளிக் கொடுப்பது நமது பண்பாடு(?). அவற்றைப் பயன்படுத்திக் கொள்வது சிலரின் வியாபார தந்திரம்.

இவ்வாறாக ஒவ்வொருவரும் கோவிலை மனசாந்தி தருமிடம், புதிய நகை, புடவை டிசைன்களை அணிந்து / அறிந்துகொள்ளும் இடம், பொழுது போக்குமிடம், கலாசார விழுமியம், கலாசார சீர்கேடு நடக்குமிடம் (சென்றமுறை நல்லூர் திருவிழாவுக்கு போடப்பட்ட பக்திப் படங்கள் இம்முறை நிறுத்தப்பட்டதற்கு கூறப்பட்ட காரணம் தான் இது), பணம் கொழிக்கும் இடம், சுற்றுலா தலம் என்று இப்படிப் பல விதமாக பாவித்துக் கொண்டாலுமே அவற்றிற்கும், அவற்றின் உள்ளே வீற்றிருக்கும் மூல மூர்த்திகளுக்கும் உள்ள மரியாதை தமிழ் நாட்டைவிட யாழ் மண்ணில் மிக மிக அதிகம் தான்.

Chithamparapillai Block
இப்பேர்ப்பட்ட யாழ் மண்ணில் அழகிய கலையம்சங்கள் நிறைந்த குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலாலான கோவில்களை, கட்டடங்களை நிர்மானித்த Ruhbins Building Constructors இற்கு ஒரு ஐந்து நிமிட ஆவணப் படம் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதன் மூலம் அவர்கள் நிர்மாணித்த கட்டடங்களை மட்டுமல்லாது யாழ் நகரத்தின் சிறப்புமிக்க சில கட்டடங்களையும் கொண்டுவர நினைத்தோம். ஆனால் அவற்றின் படங்களை நேரடியாக உபயோகித்தால் அவற்றைக் கட்டியதும் இவர்கள் தான் என்றதொரு தவறான கருத்தும் வர வாய்ப்பிருக்கிறது. எனவே தான் அவற்றை வரைந்து எடுத்து அனிமேஷன் மூலம் காட்டியிருக்கிறோம். இவற்றை அழகாக வரைந்து கொடுத்த ஜனனி அக்கா முதல் அவற்றை ஒழுங்கமைத்து அனிமேஷன் கொடுத்த நமது அனிமேட்டர் துசிகரன், இந்தியாவில் கடுமையான படிப்பின் நடுவிலும் எமக்காக நேரமொதுக்கி இசையமைத்துக் கொடுத்த சுகன்யன் வரை அனைவரின் உழைப்புமே மிக நேர்த்தியாக வந்திருக்கிறது.


இதுகாலவரையில் ஆங்கில டப்பிங்ற்கு பெரும்பாலும் கணணி மென்பொருள் மூலமான குரலையே உபயோகப்படுத்தியிருந்தோம். இதற்க்கு எப்படியாவது ரியல் வாய்ஸ் பயன்படுத்தியே ஆகவேண்டுமென்று முதலிலேயே சுகன்யன் தீர்மானம் பண்ணியிருந்ததனால் அவரது நண்பர் Chris யாழ் வந்திருந்த நேரம் அவரைக் கொண்டு முழு டப்பிங்கும் செய்து முடித்தோம்.




Chris ஐப் பற்றிச் சொல்வதானால் அவர் ஒரு மிக இனிமையான நண்பர், பலே நடனம் தெரிந்தவர், பாடகர். அவர் இங்கிருந்த காலப்பகுதியில் தான் அவரது பிறந்தநாளும் வந்தது. அதனை எமது வழமையான முறைப்படி* செய்து ஒருவழி பண்ணிவிட்டோம். அவர் கண்கள் கலங்கி நன்றி கூறியபோது தான் தெரிந்தது, இப்படி அவரது பிறந்தநாளைக் கொண்டாடி பலவருடங்கலாகிவிட்டன என்று. சிறு வயதில் ஒருமுறை தாயுடன் கொண்டாடியதாய் ஞாபகம், அதற்குப் பின்பு இம்முறைதான் என்றார். ஹிமாலயமலை நோக்கிய அவரது பயணத்தில் ஹிமாலயா கிரியேசன்ஸ் இலும் சிறிது காலம் தரித்துச் சென்றதில் எமக்கும் மகிழ்ச்சியே.

"Chris is not only a friend but also he is within the frame of Himalaya Creations. The attitude of him is beyond our imagination. We as the Himalaya Creations Pvt. Ltd will always remember you."

பிற்குறிப்பு: அது என்ன எமது முறைப்படியான பிறந்தநாள் என்று பார்க்க ஆர்வமானவர்கள் கீழேயுள்ள காணொளியைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம். நிற்க, எல்லா பிறந்தநாளும் ஒரே மாதிரியாக இருக்காது, ஆனால் ஒவ்வொன்றிலும் ஏதோவொரு கலாட்டா நிச்சயம்.




Share
Tweet
Pin
Share
3 comments
Newer Posts
Older Posts

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)...

Blog Archive

  • ►  2017 (5)
    • ►  நவம்பர் (5)
  • ►  2016 (2)
    • ►  ஜூன் (1)
    • ►  மே (1)
  • ►  2015 (5)
    • ►  மே (3)
    • ►  மார்ச் (1)
    • ►  பிப்ரவரி (1)
  • ►  2014 (8)
    • ►  டிசம்பர் (1)
    • ►  அக்டோபர் (1)
    • ►  செப்டம்பர் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (1)
    • ►  ஜனவரி (3)
  • ▼  2013 (27)
    • ►  நவம்பர் (3)
    • ►  அக்டோபர் (2)
    • ▼  செப்டம்பர் (2)
      • நூற்றிலொரு வார்த்தை
      • Ruhbins Building Constructors Documentary
    • ►  ஆகஸ்ட் (1)
    • ►  ஜூலை (1)
    • ►  ஜூன் (4)
    • ►  மே (4)
    • ►  ஏப்ரல் (4)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (3)
  • ►  2012 (43)
    • ►  டிசம்பர் (6)
    • ►  நவம்பர் (5)
    • ►  அக்டோபர் (4)
    • ►  செப்டம்பர் (2)
    • ►  ஆகஸ்ட் (2)
    • ►  ஜூன் (2)
    • ►  மே (2)
    • ►  ஏப்ரல் (1)
    • ►  மார்ச் (5)
    • ►  பிப்ரவரி (3)
    • ►  ஜனவரி (11)
  • ►  2011 (43)
    • ►  டிசம்பர் (19)
    • ►  நவம்பர் (14)
    • ►  அக்டோபர் (10)
© 2013 Gowri Ananthan. Blogger இயக்குவது.

Popular Posts

  • கௌரி அனந்தனின் "கனவுகளைத் தேடி" நாவல் வெளியீடு
  • கௌரி அனந்தன் எழுதிய 'பெயரிலி' நாவல் வெளியீடும் அறிமுக நிகழ்வும்
  • தலை முடி
FOLLOW ME @INSTAGRAM

Created with by BeautyTemplates