இடுகைகள்

தில்லானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சுவாதித்திருநாள் மகாராஜா

படம்
உலகத்திலை எத்தினையோ பேர் பாடுறாங்க. ஆனா எல்லாராலும் எல்லாரையுமே ரசிக்க முடிவதில்லை. சிலருக்கு குரலின் கம்பீரம் பிடிக்கும், சிலருக்கு நளினம் பிடிக்கும், இன்னும் சிலருக்கோ அதன் இனிமை பிடிக்கும். பலர் தாளக்கட்டை கவனிப்பார். வேருசிலருக்கோ சுருதி (கமலின்டை மகளில்லையப்பா) இம்மிபிசகாமல் இருக்க வேணும். இதையெல்லாம் தாண்டி எத்தனை பேர் ஆத்மார்த்தமாய் உணர்ந்து ரசித்திருப்பார்கள்? பொதுவாக கர்நாடக இசையை எடுத்துக்கொண்டால் இன்றுள்ளவர்களுக்கு Dr.பாலமுரளிக்ருஷ்ணா தான் எல்லாமே. ஒருமுறை ஊர்லை ராமக்ரிஷ்ணன் மடத்தில் நடந்த கச்சேரிக்கு போயிருந்தேன், அவர் தில்லானா பாடும் விதம் பிடிக்கும். ஆனாலும் ஏனோ முழுமனதாய் இருந்து ரசிக்க முடிந்ததில்லை. (பின்னையென்ன பின்னாலை யாரெல்லாம் வந்திருப்பாங்க எண்டு நோட்டம் விட்டிடிருந்தா பாட்டை எப்படியாம் ரசிக்கிறது?) இத்தனை வருடங்களின் பின் அவரின் ஒரு தில்லானா ஒளிப்பதிவை தேடிட்டிருந்தப்போ தற்ச்செயலாய் கண்ணில்பட்டவர் தான் நம்ம ராமவர்மா சார். அன்னிவரைக்கும் அவர் யாருன்னே எனக்கு தெரியாது. அதாலை எல்லா தில்லானாவையுமே போட்டிட்டு கடைசியா எதுக்கும் சும்மா போட்டுப் பாப்பம் எண்டு ...

இசையும் பாடல்வரிகளும்

படம்
பெரும்பாலும் எனது பதிவுகளில் பாத்திங்கன்ன எப்பிடியும் ஒரு பாட்டாச்சும் இருக்கும். ஆனா அதன் வரிகளைப் பத்தியோ இசையமைப்பப் பத்தியோ எதுவுமே கிலாகிச்சுச் சொல்லியிருக்க மாட்டன். அதை வாசகர்களின் பார்வைக்கே விட்டிருப்பன். (அப்பிடியே சொல்லிட்டாலும் இவ பெரிய சுப்புடு சிஷ்யை பாருங்கோ?) இண்டைக்கு ஒரு கேள்வி வந்திச்சுதா.. "இசையை பாடல்களை ரசிக்கிரன் என்று சொல்லுறியே.. ஆனா ஏன் அதைப்பத்தி அதன் அழகான வரிகளைப் பத்தியெல்லாம் எழுதிறதில்லை.." என்று. விட்டமா இண்டைக்கு எப்படியாச்சும் ஒரு பாட்டை எடுத்து அக்குவேறு ஆணிவேறாக ஆக்கிடனும் எண்டு போட்டு, iTuneல அதிகமா கேட்ட ஒரு பாட்டிலையே விநாயகர் சுழி போட்டு தொடங்கலாம் எண்டு தேடினா.. வந்தது Dr.பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் பிருந்தாவனி ராகத்திலமைந்த இந்தத்  தில்லானா .. என்னமா ரெண்டெரிங் பண்ணியிருப்பார் பாருங்கோ.. ஏதாச்சும் புரியுதுங்களா..? dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdiri dhIm nAdiri dhIm na na na tillillana tillAna nAdiri dhIm dhIm nAdiri dhIm nAdru dhIm nAdiri dhIm nanA dhIm nanA tadingiNatOm takiTa jham...