இடுகைகள்

யோகநாதன் அனந்தன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலை முடி

"என்ன திடீரென்று ஹிப்பி* வெட்டியாச்சு?" கேள்வி ஒன்றும் புதுசில்லை தான். அடிக்கடி வளர்ப்பதும் வெட்டுவதும் நமக்கு கைவந்தகலையென்று அதே ஆன்டி தான் சொல்லியிருக்கிறா. ஆனாலும் இம்முறை என்னமோ இடித்தது. ஒருவேளை சக்திவேல் அண்ணாவின் கூந்தலின் கதை யை படித்ததன் எதிரொலியோ தெரியவில்லை. இதுதான் நம்ம முடிக்கதை. சிறுவயதிலிருந்தே அப்பாவுக்கு நான் வளருகிரனோ இல்லையோ கூந்தல் ஆறடிக்கு வளர்க்க வேண்டும் என்பது விருப்பம். அதை உடைப்பதர்க்காய் ஒவ்வொரு முறையும் நான் பண்ணிய தில்லு முல்லுகள் கொஞ்ச நஞ்சமில்லை. முதலில் சாட்டியது விளையாடினா தலை வேர்க்கும், தடிமன் வரும், பிறகு இரவிலை இழுக்கும். கிட்டத்தட்ட ஆண்டு நாலு வரைக்கும் இந்தச் சாட்டு செல்லுபடியாகியது. திடீரெண்டு ஒருநாள் வந்து "ரெண்டா பிரிச்சுக் கட்டினா வேர்க்காது தானே அதால இனி முடி வெட்ட வேண்டாம்" என்று ஒரு குண்டைப் போட்டுவிட்டார். அன்றிலிருந்து ரெட்டைக் குடுமியுடன் கொஞ்சக் காலம் திரிஞ்சது. அப்பெல்லாம் சனிக்கிழமையானா நம்ம வீடு இன்னொரு குருசேஷ்திரம் போல இருக்கும். எட்டுப் பரப்புக் காணியையும் அடிபடாது ஓடிக் களைத்து ...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

படம்
ரெண்டு வரியில் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்று முடித்துவிடலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் அதில் என்ன சுவாரசியம் இருக்க முடியும் என்று தோன்றவே கொஞ்சம் நீட்டி முழக்க அதுவே ஒரு பதிவாக வந்துவிட்டது.  2012, ஓஷோவின் The Art of Dying உடன் தொடங்கியது. பயணம் இலங்கையை நோக்கியது. கொடுக்கப்பட்ட விலை சற்று அதிகம் என்றாலும் தொலைந்துபோன பக்கங்கள் சில மீட்க்கப்பட்டன. பல கேள்விகளுக்கான பதில்கள் கிடைக்கப் பெற்றன. அனந்தனுடனான இந்தியாவுக்கான இரண்டாவது ஆன்மீகப் பயணம் பல இனிய அனுபவங்களைப் பெற்றுத் தந்தது.  சாதனைகள் என்று சொல்லப்போனால், ராமர் பாலம்கட்ட அணில்குஞ்சும் உதவியதுபோல யாழின் வரலாற்றுச் சிறப்புமிக்க இரு பெரும் ஆரம்பங்களில் துணை நின்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. என்னதான் ஆயிரம் கனவு கண்டாலும் அதை திறமையாக செயல் படுத்துவதற்கு தகுந்த அணியும் தேவை. அந்தவிதத்தில் Yarl IT Hub மற்றும் Himalaya Creations Pvt Ltd இரண்டிலும் ஏதோவொருவகையில் ஊக்குவிக்கும் காரணியாக அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி. இவையிரண்டுமே இந்த குறுகிய காலத்தில் யாழில் இன்றைய சூழலில் என்னவெல...

யோகநாதன் அனந்தன்

படம்
இரண்டாவது பதிவு :  Y.Ananthan 3xCCIE #28365 (RnS, SP and Sec) இன்று(01.06.2006) திருமண நாள். யாருக்கு? அனந்தன்.. அனந்தன்.. எண்டு (கவனியுங்க ஒருத்தர் தான்) வரியப்புலத்தைச் சேர்ந்த திரு திருமதி யோகநாதன் அவர்களின் செல்வப் புதல்வனுக்கும் ஏழாலையைச் சேர்ந்த திரு திருமதி நித்தியானந்தம் அவர்களின் ஏக புத்திரிக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு (நிசமாத் தானுங்கோ, நம்பாட்டிப் போங்கோ) வைகாசித் திங்கள் சுப முகூர்த்ததில கலியாணம் நடந்தது. அவங்க சீரும் சிறப்புமா பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்தாங்கன்னு Social Networks (Facebook, Youtube, etc..) சொல்லுது.. நிற்க, இப்ப எதுக்கு இந்த சுயபுராணம் எண்டு கேட்டிங்கன்னா.. சமீபத்திலை "திரு. யோகநாதன் அனந்தன் அவர்கள் சிஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட கணணி வலை வல்லுநர்(இரட்டை) ஆனதை முன்னிட்டு நண்பர்கள் சார்பில் பாராட்டு விழா" ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் வாழ்த்துரை வாசிப்பதற்கு எழுத்தாளர்(?) என்ற முறையில என்னைக் இழுத்து விட்டிடாங்க. அதில வேறை நாம எல்லாரைப் பத்தியும் எழுதுறம் ஆனா நம்ம ஆத்துக்காறரைப் பத்தி எது...