Y.Ananthan (Quad CCIE #28365)
உலகத்தில ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கனவிருக்கும். அதை அடைவது சந்தோசமென்றால் அதை அடைய உதவுவது அதைவிட சந்தோசம். இற்றைக்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு ஒரு மங்கள நாளில் அவர்கள் இருவரும் பிரிந்து விடுவதாக பத்தாவது முறையாக முடிவெடுத்திருந்தனர். ஆனாலும் முந்தைய ஒன்பது முடிவுகளின் பின்னர் போல் இல்லாமல் இம்முறை கம்பஸ் முடிந்து விட்ட காரணத்தினால் இனிமேல் இருவரும் சந்திக்கும் வாய்ப்பு அரிது என்பதனால் சற்று அதிகநேரம் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தான் அவளுக்கு என்ன தோன்றியதோ திடீரென்று கேட்டாள். அவனின் வாழ்க்கையின் கனவு/லட்சியம் என்னன்னு.. இதற்க்கு முன்பும் பல தடவை கேட்டிருக்கிறாள். அப்போதெல்லாம் அவன் ஒவ்வோர் முறையும் ஒவ்வோர் பதிலை சொல்லியிருக்கிறான். ஆனால் எந்தப் பதிலும் அவளுக்கு திருப்பதி தரவில்லை. அதாவது அவனது ஆழ்மனது ஆசையாக அவளுக்குப் படவில்லை. ஏதோ வாழ்க்கையை சுமூகமாய் ஒட்டி கரை சேர்ப்பதற்குத் தேவையான வரையறைக்குள் மட்டுப்பட்டிருந்தது. இம்முறை அவள் இரண்டாவது, மூன்றாவது முறை கேட்டும் எந்தப் பதிலும் அளிக்காமல் அசிரத்தையாக ஏதோ ஆழ்ந்த யோசனையில்...