கெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து... - பாலு மணிமாறன்
கெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து... - பாலு மணிமாறன், பதிப்பாளர் தங்கமீன் பதிப்பகம். உங்கள் முன் வைக்கப்படும் புதிர்களை அவிழ்ப்பதற்கு, சதா அலைந்தாடும் மனம் உங்களுக்கு உண்டென்பதை ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருக்கிறீர்களா? உணர்ந்திருப்பீர்கள். நானும் உணர்ந்திருக்கிறேன். ஆறாம் வகுப்பு. கணிதப்பாடம். என் ஆசிரியர் ஒரு கணக்கைப் போடுகிறார். இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல, வீட்டில் போய் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த கணக்கிற்குப் போய் விடுகிறார். நான் விடை தேடுவதில் மூழ்கிவிட்டேன். மிகச் சவாலான கணக்கு. 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடமென நேரம் ஓடுகிறது. ஒரு தருணத்தில் விடையைக் கண்டடைந்துவிட்டேன். "டீச்சர் இதுதான் விடை" என்ற என் உற்சாகக் கத்தலில் சக மாணவர்கள் அதிர்கிறார்கள். நடத்திக்கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு ஆசிரியை குழப்பமாகிப் பார்க்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். அவர் முகத்தில் சின்னதாக ஒரு புன்முறுவல். 'வெரி குட்' என்ற வார்த்தைகளால் பாராட்டிவிட்டு, 'எல்லோரும் சேர்ந்து கை தட்டுங்க' என்றது...