இடுகைகள்

peyarili லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து... - பாலு மணிமாறன்

படம்
கெளரி அனந்தனின் 'பெயரிலி' நாவலை முன்வைத்து...  - பாலு மணிமாறன், பதிப்பாளர் தங்கமீன் பதிப்பகம். உங்கள் முன் வைக்கப்படும் புதிர்களை அவிழ்ப்பதற்கு, சதா அலைந்தாடும் மனம் உங்களுக்கு உண்டென்பதை ஏதேனும் ஒரு தருணத்தில் உணர்ந்திருக்கிறீர்களா? உணர்ந்திருப்பீர்கள். நானும் உணர்ந்திருக்கிறேன்.  ஆறாம் வகுப்பு. கணிதப்பாடம். என் ஆசிரியர் ஒரு கணக்கைப் போடுகிறார். இதற்கான விடையைக் கண்டுபிடிப்பது சுலபமல்ல, வீட்டில் போய் முயற்சி செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு அடுத்த கணக்கிற்குப் போய் விடுகிறார். நான் விடை தேடுவதில் மூழ்கிவிட்டேன். மிகச் சவாலான கணக்கு. 5 நிமிடம், 10 நிமிடம், 15 நிமிடமென நேரம் ஓடுகிறது. ஒரு தருணத்தில் விடையைக் கண்டடைந்துவிட்டேன். "டீச்சர் இதுதான் விடை" என்ற என் உற்சாகக் கத்தலில் சக மாணவர்கள் அதிர்கிறார்கள். நடத்திக்கொண்டிருந்த பாடத்தை நிறுத்திவிட்டு ஆசிரியை குழப்பமாகிப் பார்க்கிறார். பின்னர் புரிந்து கொள்கிறார். அவர் முகத்தில் சின்னதாக ஒரு புன்முறுவல். 'வெரி குட்' என்ற வார்த்தைகளால் பாராட்டிவிட்டு, 'எல்லோரும் சேர்ந்து கை தட்டுங்க' என்றது...

கனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவுகளும்

படம்
கனவுகளைத் தேடி அலையும் பெயரிலிகளும் அவர்கள்தம் கனவுகளும் கனவுகளைத் தேடி - 2015, பெயரிலி - 2016 நாவலாசிரியர்: கௌரி அனந்தன் விமர்சனம் : முனைவர்  தோழா் பெருமா. செல்வ. இரா சேசு கௌரி அனந்தன் அவர்களின் இரண்டு நாவல்களை ஒருசேர வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இரண்டு நாவலும் இரண்டு விதமானவை. இரண்டையும் தனித்தனியே பேசலாம். அந்தளவுக்கு மொழி வளமும், கதையாடல் திறனும்; மிக்கவை. “கனவுகளைத் தேடி” நாவல் சாதாரண கதையுக்தியைக் கொண்டீருக்க, “பெயரிலியோ” மாய எதார்த்தவாத தன்மையைக் கொண்டு படிப்பவரின் மனதை விடாமல் நாவலுக்குள்ளேயே பயணிக்கச் செய்கிறது. இரண்டும் வௌ;வேறு மையங்களில்; இயங்கிக்; கொண்டிருந்தாலும், அவை பயணிக்கும் பாதையும் அந்தப் பாதைகள் நெடுகிலும் ஆசிரியர் கொண்டு நிறுத்தும் சம்பவங்களும் கதாப்பாத்திரங்களும் மிகவும் செறிவானவை. சுவாரசியமானவை.  “கனவுகளைத் தேடி” நாவல் பெண்ணியம், சுதந்திரம், அடக்குமுறைக்கு எதிரான போராட்டம், சுதந்திரத்தாகம் எனப் பல்வேறு தளங்களில் பயணிக்கிறது. இது இந்நாவலாசிரியரின் முதல் நாவல் என்பதை நம்மால் நம்பமுடியவில்லை. காரணம், மொழிநடை. கதையுக்தி, கதையாடல் தன்மை ப...

இரண்டாமவரே முதன்மை பெறுவர்

படம்
இரண்டாமவரே முதன்மை பெறுவ ர் கெள ரி அனந்தனின் - பெய ரி லி                                               முனைவர் சு. செல்வகுமாரன்                                               உதவிப்பேராசரியர்                                               அண்ணாமலைப்பல்கலை க்கழகம்        ...