இடுகைகள்

campus லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

துரோகிகளும் தூங்கிப்போனோரும்

படம்
ஆளாளுக்கு என்னமோ காகிதக்கப்பல் விடுறதுபோல ஒவ்வொரு கதை (சத்தியமா கப்டனை ச் சொல்லவில்லை) சொல்லுறாங்கள். அதால நானும் இண்டைக்கு உங்களுக்கு ஒரு கதை சொல்லியே ஆகவேணும். நித்திரை வருமாப்போல இருப்பவர்கள் தயவுசெய்து இப்பவே உங்கடை கனவுதேசத்துக்கு ஓடிடுங்கோ. நம்ம கனவுதேசம் கொஞ்சம் Terrorஆ இருக்கப் போகுது. யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஏசுநாதரைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். வெளியே அவரின் பரமசீடன் ஒருவன் சோகத்துடன் உட்கார்ந்திருக்கிறான். அபோது அருகிலிருந்தவன் கேட்கிறான், "உனக்கு அவரைத் தெரியுமா?" "இல்லை." சிறிது நேரம் செல்கிறது. "உன்னைப் பார்த்தால் அவர்களிலொருவன் போலவே இருக்கிறது." "சத்தியமா, அவர்கள் எப்படி இருப்பார்கள் என்றே எனக்குத் தெரியாது." விடிவதற்கு இன்னும் சிலநிமிடங்களே இருக்கிறது. "இல்லை. இவன் பொய் சொல்கிறான். பிடித்து விசாரியுங்கள்." இப்போது அவனுக்கு பயம் தொறிக்கொண்டது. "ஐயோ. என்னை விட்டிடுங்கோ. நான் ஒரு அப்பாவி." எழுந்து விரைகிறான். சேவல் கூவுகிறது. "நாளை விடிவதற்குள் மூன்றுமுறை என்னைத் தெரியாத...

"அவள்" ஒரு தொடர் கதை ... : தயக்கம்

படம்
பாகம் ஐந்து : தயக்கம்  இப்ப கொஞ்சநாளாய் தினமும் விரிவிரை முடிந்ததும் சிலமணிநேரம் Arts Faculty Gymல போய் பாட்மிண்டன் விளையாடுவது வழக்கம். இன்றும் அப்படித்தான் 'டபுள்ஸ்' விளையாடிக் கொண்டிருந்தனர். ஆனால் நண்பர்களின் கேலி கிண்டல்  இன்றைக்கு  வழக்கத்துக்கு மாறாய் புதிதாய் இருந்தது. அவன் அடித்த டாஷ் கோட்டுக்கு வெளியே போய் விழுந்தபோது, "டேய் அவளண்ட மூஞ்சிய பாத்துக்கொண்டு அடிக்காம பூவப் பாத்து அடிடா.." நண்பர்களின் கிண்டல் தாங்காமலோ என்னமோ கொஞ்ச நேரத்தில் அவன் தலை இடிப்பதாய் சொல்லிவிட்டு இளைப்பாறப் போய்விட்டன். அவளும் உஷாவும் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்தனர். ஒரு பத்து நிமிஷம் கூட முடிஞ்சிருக்காது,  "தா.. நான் விளையாடப் போறன். நீ போய் இரு." என்று அவளிடம் Racketஐ பறிக்கும் போது அவன் கரம் வேண்டுமென்றே அவளின் கையை இறுகப் பற்றியது. உஷாவைப் பார்த்தாள்.  "போய் இரு, கொஞ்சநேரத்தில வாறன்." என்றாள் மெல்லிய புன்னகையையுடன். அங்கு இருக்கப் பிடிக்காமல் கான்டீன் போய் உட்கார்ந்தாள். "என்ன பொறாமையா இருக்கா?" கேட்டது ரஞ்சன்தான்.  "இவ்வளவு நேரமும் எங்க போ...

"அவள்" ஒரு தொடர் கதை ... : கோபம்

படம்
பாகம் மூன்று : கோபம்  "நீ அவனைக் காதலிக்கிறியா?" விரிவுரை முடித்து வந்துகொண்டிருந்தவளைக் கூட்டிச்சென்று கேட்டபோது முதலில் எதுவுமே புரியவில்ல அவளுக்கு. அருகில் நின்ற உஷாவைப் பார்த்தாள்.  "நீ தானே சொன்னாய் கேள் எண்டு.." இப்போது புரிந்துவிட்டது.  "அதுக்கு இப்படித்தான் சொல்லி வைச்சிருக்கிறியா? நான் இதையா கேக்கச் சொன்னான்?" "அதுக்கு இதுதானே அர்த்தம்." ரஞ்சன் இடைமறித்தான். அவளுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எதற்காய் மீண்டும் தப்பு மேல தப்பு செய்கிறாய் என்று உள்மனம் எச்சரித்தது. தூரத்தில் அவன் வழக்கம் போல தமிழ் மரத்தின்கீழே இருந்துகொண்டு எதுவுமே நடவாதது போல கடலை போட்டுக்கொண்டிருந்தான். உண்மையிலேயே இவனுக்கு சம்பந்தம் இல்லையா? அல்லது தெரியாதது போல் நடிக்கிறானா? "Thamil Maram" The memories root all the way to the trunk and the bottom layed benches... Giving every thing all it can. Shades to all who have been under the mighty tree. All the stories are written inside the core and the branches are every where may be visible only to the ...

"அவள்" ஒரு தொடர் கதை ... : அறிமுகம்

பாகம் ஒன்று : அறிமுகம்  இற்றைக்கு சுமார் பத்து வருடங்களின் முன்பு ஒரு நாள்.. கல்லூரி தொடங்கி சில நாட்களே ஆயிருந்தன. இன்று, அறிமுக தினம். எல்லா பிரிவு மாணவர்களும் இரசாயன பகுதி விரிவுரை மண்டபத்தில் கூடியிருந்தனர். எல்லோர் முகங்களிலும் ஒருவித பெருமிதமும் சந்தோசமும் குடிகொண்டிருந்தது. அதற்குக் காரணமில்லாமல் இல்லை. அப்போதெல்லாம் உயர் தரத்தில் நாடளாவிய ரீதியில் அதியுயர் புள்ளிகள் பெற்ற சுமார் இருபது விகிதமான மாணவர்களுக்கே கல்லூரி அனுமதி கிடைக்கும். அவர்களையும் கூட தரம் பிரித்து முதலில் மருத்துவம், பொறியியல் போக எஞ்சியோரே இங்கு வந்திருப்பர். ஆனாலும் கூட மிகுதி எண்பது சதவிகிதத்தை விட தாம் உயர்ந்தவர்கள் என்ற மிதப்பு இருக்கும். இவர்களுக்கே இப்படி என்றால் முதல் இரு பிரிவுக்கும் சென்றவர்களைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. பேராசிரியர்கள் அறிமுகம் தொடங்குவதற்கு இன்னும் ஒருசில நிமிடங்களே இருந்தன. அதற்குள் மாணவர்கள் அருகிலிருந்தவர்களிடம் அறிமுகம் செய்யத்தொடங்கி விட்டிருந்தனர். இது விரிவுரை மண்டபமா இல்லை மீன் சந்தையா என்று ஒருகணம் தோன்றியது அவளிற்கு.  அடடா, சொல்ல மறந்திட்டன். "அவள்" தான் இ...