இடுகைகள்

சிவபுராணம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இளையராஜாவின் சிவபுராணம்

படம்
என்ன திடீரென்று ஒரே பக்தி மயமா இருக்கே என்று நினைக்காதேங்கோ.. நாமெல்லாம் சுத்த(?) சைவாள் பரம்பரையாக்கும். இதற்காகவே அப்பா தன்ரை சின்ன வயசிலையே அசைவம் துறந்துவிட, அம்மாவுக்கு  எண்டை சின்னவயசிலைதான் திடீர் ஞானம்வந்து அதைத்தொடர.. நம்ம பாடு திண்டாடம்.. எண்டெல்லாம் சொல்லமுடியாது. ஏனென்டா நமக்கு எதோ பசிச்சா கிடைக்கிறதை தள்ளும் குணம்தான்.. அது சைவமெண்டா என்ன அசைவமெண்டா என்ன. ஆனா இனிக்கு சைவம் தான் எண்டு முடிவு பன்னிட்டனேண்டா முன்னால மூக்குப் பிடிக்க அசைவம் மணத்தாலும் தொடமாட்டன். மற்றபடி மூண்டு நேரமும் சாப்பாடுத்தட்டை நீட்டிக்கொண்டிருக்கும் அம்மாவிடம் இருந்து தப்புவது எப்படி என்ற கவலைதான் அதிகம். அப்பா வேற, "ஒருவேளை சாப்பாடு கூட கிடைக்காமல் எத்தினைசனம் கிடந்து சாகுது. உனக்கு நாங்கள் இப்பிடி கெஞ்சிக் கெஞ்சி சாப்பிட வைக்க வேண்டிக் கிடக்குது" எண்டு அன்னிலையிருந்து இன்னிவரை ஒரே புராணம். என்ன முந்தி கடிதத்திலை, இப்ப ஈமெயில்ல...  டெக்னாலஜி என்னமா முன்னேறிட்டுது பாருங்க.. சே.. திருவாசகத்தைப் பற்றித் தொடங்கிட்டு சாப்பாட்டைப் பத்திக் கதைச்சிட்டிருக்கிரன் பாருங்கோ.. இ...