இடுகைகள்

சிங்கப்பூர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதி கண்ணம்மா : நின்னைச் சரணடைந்தேன்!

படம்
அந்திமாலைப்   பொழுது அவனருகிருக்கும் பொழுது   மனதினிக்கும் பொழுது   மகிழ்ந்திருக்கும் பொழுது கரம் பற்றி   விரல் நீவி   தோழ் சாய தலை கோத கண் பார்க்க இதழ் சேர்க்க   மடி சாய உடல் மூட   ஆதவன் மெதுவாய் மறைய   நீதான் என் ஒளிவிளக்கு ..  அவன் உதடுகள் மொழிய   அது ஒரு பொன் .. மாலைப் .. பொழுது ..  எழுதிமுடித்துவிட்டு அவன் முகம் பார்த்தாள். மயக்க ஊசியில்லாமலே நிம்மதியாத் தூங்கிக்கொண்டிருந்தான். அணையப் போகிற விளக்கு இறுதி நேரத்தில் பிரகாசமாய் எரியுமே.. அதுபோலிருந்தது அவன் முகம். எழுந்து சென்று காலை போடவேண்டிய மருந்துகளை எடுத்து  அடுக்கினாள். நேற்று அவள்பாட்டுக்கு மருந்தை எடுத்துக் குடுத்ததுக்கு nurse திட்டியிருந்தார். அதனால் அவனை எழுப்பாமல் பேசாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். இப்படி எத்தனை சந்தோசமான தருணங்களைத் தொலைத்துவிட்டோம் என்று நினைக்க நினைக்க வலித்தது. இனி அவன் இருக்கப் போற ஒவ்வொரு நிமிடங்களுமே சந்தோசத்தை மட்டுமே பார்க்க வேண்டும் என நேற்றே முடிவு செய்திருந்தாள். அதற்கு...

பாரதி கண்ணம்மா : நிம்மதியைத் தேடி

படம்
நேற்று முழுக்க ஒரே இருமலாக இருந்தது அவனுக்கு. இடைக்கிடை ரத்தமாய் வாந்தி வேறு. அவளது அம்மமாவுக்கும் கூட இப்படித்தான் புற்றுநோய் வந்து அவதிப்பட்டுப் பார்த்திருக்கிறாள். அவர் படும் கஷ்டத்தைப் பார்க்க இயலாமலே அவவை சீக்கிரம் கொண்டு போகச்சொல்லி கடவுளிடம் பிரார்த்திதிருக்கிறாள்.  ஆனால் இவன் சாகப் போகிறான் என்பதை மட்டும் அவள் மனம் ஏனோ ஏற்க மறுத்தது. 'முப்பது வருஷ வாழ்க்கையை மூன்றே நாளில் வாழ்வதென்றால்? கடவுளே நீதான் எனக்கு முழு சக்தியையும் குடுக்க வேணும்.' மனதுக்குள் வேண்டிக்கொண்டாள். "கண்ணம்மா.." அவன் வலியில் முனகினான். ஓடிச்சென்று அவனது தலையை நிமிர்த்தி கன்னத்தை மெதுவாய் தடவிவிட்டாள். "வலிக்குதாடா..? கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் போய் மருந்தேடுத்துக்கொண்டு வாறன்." சொல்லிவிட்டு ரெண்டே எட்டில் மேசையை அடைந்து லேபல் படித்து மருந்தையும் தண்ணியையும் கொண்டு வந்து கட்டிலின் அருகிலிருந்த ஸ்டூலில் வைத்தாள். தலைக்குப் பின்னால் ரெண்டு தலையணையை அடுக்கி அவனை சற்றே வசதியாய் சாய்ந்து இருக்க வைத்தாள். அவன் பேசாமலிருந்தாலும்  வலியின் கொடூரம் முகத்தில் தெரிந்தது. மருந்துகளை மீண்டும...

பாரதி கண்ணம்மா : தீர்த்தக் கரையினிலே

படம்
யார் எப்படிப்போனால் அவளுக்கென்ன வந்தது. பேசாமல் வந்தமா பார்த்தமா போனமா எண்டு இருக்கிறது தானே. அப்போ படிப்பு? இன்று இப்படி வந்ததுக்கே டிஸ்மிஸ் பண்ணுற சாத்தியகூறு அதிகம். அதுவும் முதல் நாளே இப்படி ஓடுகாலி போல சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போனவளை எப்படி சேர்ப்பினம்? ஆனால் வீட்டை எந்த மூஞ்சிய வைச்சுக்கொண்டு போய்நிற்பது என்றுதான் அவளுக்குத் தெரியவில்லை. அப்பவும் படிச்சுப் படிச்சு சொல்லி அனுப்பினவை. கேட்டாளே? எத்தனை நம்பிக்கையுடன் வந்திருந்தாள். ஆனால் அவன்..? கானல் நீராய் போன அந்த ஒவ்வொரு பொழுதுகளையும் சேமித்து வைத்திருக்கிறேன் என் நெஞ்சுக்கூட்டுக்குள்..! வந்த முதல் நாளே இப்படிப் பொறுப்பில்லாமல் ஊர் சுற்றிவிட்டு வருகிறவளுக்கு நாக்கைப் பிடுங்கிற மாதிரி நாலு கேள்வி கேக்க வேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தவருக்கு, அவள் வந்து நின்ற கோலம் பதை பதைப்பை ஏற்படுத்தியது. உன் பார்வை உன் புன்னகை உன் கோபம் எதுவும் மறையவில்லை இன்னமும்.. மணல் மீது வரைந்த கோடுகள் அலை மீது எழுதிய கோலங்கள் எது உண்மை ? "what happened to you? are you ok?" அவள் தலையை மட்டும் ஆட்டினாள். அவள் நின்ற தோரண...

பாரதி கண்ணம்மா : நல்லதோர் வீணைசெய்தே

படம்
இதுதான் அவரின் அறை. பூட்டியிருக்குமா? தட்டலாமா? வேறு யாரவது இருப்பார்களா? நெஞ்சு  படபடவென்றது. மெதுவாக கைப்பிடியை திருகிப் பார்த்தாள். திறந்தேயிருந்தது. தொண்டைவரை வந்துவிட்ட மகிழ்ச்சியை விழுங்கிக்கொண்டு உள்ளே எட்டிப் பார்த்தாள். ஒரேயொரு கட்டில் தானிருந்தது. அதன் மேல் கிழிந்துபோன துணியாய் அது.. அவனேதான். நல்லதோர் வீணைசெய்தே -அதை நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ? கடவுளே இந்தக் கோலத்தைப் பார்க்கத்தான் இத்தனை கடல் தாண்டி மலை தாண்டி வந்தாளா? எதற்காய் இவனுக்கு இப்படி ஒரு பெரிய தண்டனையைக் கொடுத்தாய், ஆண்டவா.. கண்களை நீர் மறைத்தது. இந்தக் கோலத்தில் அவன் என்னைப் பார்ப்பதை விரும்புவானா? இல்லை. விரும்பியோ விரும்பாமலோ இத்தனை கஷ்டப்பட்டு வந்தாயிற்று. ஒருதரம் அவனது கைகளைத்தன்னும் தொட்டுப் பார்த்துவிட்டு ஓடிடணும். சத்தம் போடாமல் மெதுவாய் அடிமேல் அடிவைத்து அவனருகில் சென்றாள். அவன் வலியால் முனகுவது போலிருந்தது. தலையை மெதுவாய் தடவிவிட்டாள். முறுவலித்தான். இந்த நேரத்திலும் இந்தச் சிரிப்புக்கொண்டும் குறைச்சலில்லை. கோபமாய் வந்தது. குனிந்து நெற்றியில் முத்தமிட்டாள். உடலில் சற்றே அசைவு தெரி...

பாரதி கண்ணம்மா : நின்னையே ரதியென்று

படம்
அதிகாலை  நாலு  மணிக்கே  அலாரம்  வைத்திருந்தாள். இப்படி அலாரம் வைத்து எழுந்து அவளுக்குப் பழக்கமில்லைத்தான். இருந்தாலுமே இங்கை இருக்கிற ஒரு நிமிடம் கூட வீணடிக்கக்கூடாது என்பதில் கவனாமாயிருந்தாள். ஹாட் வாட்டர் போட்டு குளித்துவிட்டு உடை மாற்றி பவுடர்பூசி பொட்டுவைக்க முகத்தை கண்ணாடியில் பார்த்தபோது, தன் அழகைப் பற்றி அவளுக்கே கொஞ்சம் கர்வம் வந்தது. பொன்னையே நிகர்த்த மேனி மின்னையே நிகர்த்த சாயல் இப்படி அவனுக்குப் பிடித்த கலரில் உடையணிந்து அவனுக்குப் பிடித்த ஒரு பெண் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று முன்னால் போய் நின்றால் எப்படி  ரியாக்ட் பண்ணுவான்? நினைக்கவே மனசுக்குள் ஆயிரம் மத்தாப்பூ கொளுத்தியது போல இருந்தது. மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ கண் பாராயோ வந்து சேராயோ கடிகாரத்தைப் பார்த்தாள். ஐந்து மணிதான் ஆகியிருந்தது. வார்டன் எட்டு மணிக்குத்தான் வருவார் என்று நேற்று செக்யூரிட்டி சொன்னது. அதுவரை காத்திருக்க முடியாது. அதற்குள் போய்ச்சென்று பார்த்துவிட்டு வந்திடலாமா? சும்மா இருந்து யோசித்துக்கொண்டிருப்பதில் எந்தப் பயனுமில்லை. பர்சை எடுத்த...

பாரதி கண்ணம்மா : யாமறிந்த மொழிகளிலே

படம்
அந்த விமானம் சிங்கப்பூர்ஐ வந்தடைந்தபோது நேரம் நள்ளிரவை நெருங்கிவிட்டிருந்தது. இந்த நேரம் Hospital போகமுடியாது. அப்பிடியே போனாலும் உள்ளே விடமாட்டார்கள். Hostel போய் குளித்துவிட்டு நாளைக்கு சீக்கிரமே எழுந்து போய்விடவேண்டும். Campusல் வேறை பத்து மணிக்குமுன் பதியச்சொல்லியிருந்தது. ரெண்டுநாள் முன்னமே வந்து தொலைத்திருக்கலாம். ஆனால் வீட்டில் எல்லோரையும் சமாதானப் படுத்தி, எப்ப பார் தடை போட்டுக்கொண்டிருக்கும் அம்மா வேறை.. ஏதோ இந்த உலகத்தை விட்டே போகப்போறமாதிரி ஒப்பாரி. என்னமோ இதுவரை வந்ததே பெரிய விசையம். ஆனால் எப்படிப் போய் அவர் முகத்தில் முழிப்பது. நினைக்கவே நெஞ்சு படபடவென்றது. மனுசி வேறை கூட இருக்குமோ தெரியாது. பலவிதமாய் அலைபாய்ந்த மனதை ஒருவாறு கட்டுப் படுத்திக்கொண்டு டாக்ஸி ஸ்டான்ட் போய் நின்றாள்.  அவள் பயந்தது போல இந்த ஊர் ஒன்றும் வேற்றுக்கிரகம் போல தெரியவில்லை. எல்லாமே இலகுவாய் கண்டுபிடிக்கக் கூடியதாகவிருந்தது. கண்பட்ட இடமெல்லாம் தெரிந்த தமிழ்மொழியைப் பார்க்கவே பெருமையாக இருந்தது. நானும் தமிழ் தான் என்று கத்த வேண்டும் போல இருந்தது.  யாமறிந்த மொழிகளிலே  தமிழ்மொழிபோல்...

பாரதி கண்ணம்மா : தொடர் அறிமுகம்

பாரதி கண்ணம்மா ...  அடுத்த தொடர் ரெடி. இது மூன்று நாட்களில் நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை நோக்கியது. முக்கிய பகுதிகள் பல  இருவருக்கிடையேயான உரையாடல் பாணியில் அமைந்திருக்கும். இருவரது தேடல்களும்  வித்தியாசமானவை. பாதைகள் வேறானவை. ஒருவேளை அவைகள் ஏதோவொரு புள்ளியில் ஒன்று சேர்ந்திருந்தால்.. ஒரு கற்பனை நிகழ்வு. இதில் புற்றுநோய் பற்றிய  விழிப்புணர்வு, அதில் பாதிக்கப் பட்டவர்களளின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளல், அவர்களின் கடைசிநேர ஆசைகள் என்று பலவற்றை எனக்குத் தெரிந்தவரை கூறியிருக்கிறேன். தவறிருந்தால் தயங்காது எடுத்துச் சொல்லுங்கள். இதில் பெயர்களை முன்னமே வைத்துவிடுகிறேன். அவன் பெயர் பாரதி. அவள் பெயர் தெரியாது. ஆனால் அவன் அழைப்பது வேறென்ன 'கண்ணம்மா'வேதான். இந்தக் கதைக்கு அத்திவாரமிட்ட ஒருசில சம்பவங்களை விட மற்ற எல்லாமே கற்பனையானவை. எனவே குறைகள் நிறைய இருக்கலாம். தயங்காமல் சுட்டிக்காட்டுங்கள். ஆ.. பிறகு, பாரதி எண்டு சொல்லிட்டன், பாரதியின் கவிதைகள் இல்லாமலா..? கூடவே கண்ணம்மாவின் கிறுக்கல்களும் இருக்கும் பொறுத்துக்கொள்ளவும்.. :) ஏதோ ஒருவேகத்திலை எழுதத் தொடங்கிட்டன். ...

Elevator என்கிற "லிப்ட்"

படம்
Luxury Passenger Elevator © Sepac-International Co., Ltd.  இந்த "Escalator" இருக்கே.. பொறுங்க.. பொறுங்க.. Elevatorக்கும் Escalatorக்கும் ஒரு சின்ன குழப்பம். அதனால இனி லிப்ட் எண்டே சொல்லிடறேன். சரியா..? தினம் பஸ் பிடிக்கிறமோ இல்லாட்டி டாக்ஸி பிடிக்கிறமோ குறைந்தது ஒரு தடவையாச்சும் இதைப்  பிடிச்சே ஆகணும். நிமிசத்துக்கு ரெண்டு தரம் வந்து போற லிப்டுக்கு என்னமோ அஞ்சு நிமிசத்துக்கொருக்கா வாற MRT ஐ பிடிக்கிற மாதிரி ஓடுவாங்க. இருக்கிறதே கொஞ்ச இடம். அதில வேற சுத்திவர கண்ணாடி.  வீட்ல கண்ணாடியே பாக்காதவங்க மாதிரி, அப்பத்தான் முன்ன பின்ன திரும்பிப் பாக்கிறது. யாராச்சும் HDBட சொல்லி உந்தக் கண்ணாடிய கழட்டிப் போட்டு இப்படி ஏதாச்சும் Artwork போடச்சொல்லுங்கோவன். பாக்கிறமாதிரியாச்சும் இருக்கும். டக்கெண்டு பாத்திங்கன்னா  Reflectionல் ஒரு "stretching room" effectம் இருக்கும். என்ன ரசனையப்பா! சரி, ஒரு பத்திருபது படி தானே அப்பிடியே ஒரு ஜம்ப் பண்ணி போய்டலாம் எண்டு பாத்தா, மாங்கு மாங்குன்னு ஜிம்ல ஒருமணி நேரம் Treadmill ப...