முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

"அவள்" ஒரு தொடர் கதை ... : ஆசிரியர் பின்னூட்டம்


அன்பார்ந்த வாசகப் பெருமக்களுக்கு வணக்கம்!

பல இன்னல்கள் மத்தியிலும் இத் தொடரை முழுமையடையச்செய்த  உங்கள் மகத்தான ஆதரவுக்கு நன்றி.

இவை அனைத்தும் சற்றே வித்தியாசமான நடையில் அமைந்துள்ளதாக குறிப்பிட்ட பலர்,  யாரோ ஒருவரின் தினக்குறிப்பேட்டைப் படிப்பதுபோல் ஒரு உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்கமுடியவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தனர். சிலர் தமது வாழ்க்கையிலும் கூட இத்தகைய சம்பவங்கள் நடந்திருப்பதாகவும்  தெரிவித்திருந்தனர். உண்மைதான். இவை அனைத்துமே பலவருடங்களுக்கு முன்புநடந்த பல உண்மைச் சம்பவங்களின் தொகுப்பே. இவை யாருக்கோ எதனாலோ நடந்திருக்கலாம். ஆனால் சற்று ஊன்றிக் கவனித்தோமானால் பல விடயங்கள் திரும்ப திரும்ப நடந்திருப்பது புரியும்.

உதாரணத்துக்கு தடுப்புமுகாம் சம்பவம் இன்றும் கூட நடந்துகொண்டிருப்பது. ஆனால் அதன் தீவிரம், கொடூரம் அன்றை விட இன்று பலமடங்கு அதிகம். முதல் தரமே விழித்திருந்தால் இரண்டாவதுமுறை நடப்பதைத் தவிர்த்திருக்கலாம் தான். ஆனால் அதுவே பூதாகரமாகி பின் வேறொரு உருவில் வந்தால்..? இப்படி பல குழப்பங்கள், தவிப்புகள், நிராசைகள், ஏமாற்றங்கள் நிறைந்த ஒரு தனிமனித வாழ்க்கைப் பாதையை என்னால் முடிந்தவரை சமூக அக்கறையுடன் சேர்த்து படம் பிடித்துக்காட்ட முயற்சி செய்திருக்கிறேன். இது எனது கன்னி முயற்சியல்ல. ஆனால் கடைசி முயற்ச்சியாய் இருக்கலாம்.

சகோதரர்களே, நமது வாழ்க்கைப் பாதையில் ஆயிரம் வலிகள், துயரங்கள் தான் இருக்கட்டுமே.. ஒருதுளி கண்ணீர் நிலத்தை நனைக்குமுன் அந்த மாவீரர்களின் கனவுகளை, தியாகத்தை சற்றே யோசித்துப் பாருங்கள். எமது வலிகள், ஏக்கங்கள் எல்லாம் அற்பமாய் துச்சமாய் காணாமலே போய்விடும்.

"அவர்கள்" நீதியின் முன் ஏழை, பணக்காரன் பார்த்ததில்லை. தியாகத்தில் படித்தவன், படிக்காதவன் பேதமிருக்கவில்லை. எந்த மதத்தையும் ஆதரிக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. ஆனால் ஒவ்வோர் மனதிலும் கடவுள்களாய் குடிபுகுந்துவிட்டனர். அவர்கள் தாம் எமது வழிகாட்டிகள், நம் தலைமுறை காத்த தெய்வங்கள் என்று சொல்லிக்கொடுப்போம், இனிவரும் தலைமுறைக்கு!

இன்று நம்மில் பலர், நாம் எங்கு தவறினோம், எதில் தவறிழைத்தோம் என்பதில் தான் முழுக் கவனமும் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவ்வாறு குறைகளை அலசுவதுடன் மட்டும் நின்றுவிடாமல் அவற்றை  நிறைகளாய் மாற்றித் தான் காட்டுவோமே?

இந்தத் தொடர் ஒரு சிலரின் வாழ்க்கைப் பாதையில் அல்லது அவர்களது சமுதாய கண்ணோட்டத்தில் ஒரு சிறு மாற்றத்தையேனும் தந்திருந்தால் அல்லது சற்றே நின்று யோசிக்க வைத்திருந்தால் அதுவே போதும். மற்றபடி யாரையும் காயப்படுத்துவதற்காகவோ அறிவுரை சொல்வதற்காகவோ எழுதப்படவில்லை. அதற்கான தகுதியும் என்னிடம் இல்லை. 

"ஒற்றுமையே பலம்!"

என்றும் அன்புடன்,
கௌரி அனந்தன்.

"NOT JUST HISTORY, HER STORY REPEATS ITSELF TOO."

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்