முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

புட்டும் தேங்காய்ப்பூவும்

எரியுற நெருப்பில எண்ணைய வாக்கிராப்போல இது தேவையா என்று ஒருக்கா தோணிச்சு. ஆனால் தற்போது இலங்கையின் பலபாகத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக மிதவாத சிங்கள பௌத்தர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் குறித்து ஏன் இன்னும் பலர் மௌனமாகவோ அல்லது அடக்கி வாசிக்கிறார்கள் என்றோ பலருக்கு தோன்றாமலில்லை. இன்னும் சிலரோ அதற்க்கும் மேலே போய், புட்டும் தேங்காய்ப்பூவும் போல இருக்கும் எமதருமை சகோதரர்களுக்கு  இது நல்லா வேணும் என்ற ரீதியில் பதிவுகளை இட்டு வருகிறார்கள். எனது இந்தப் பதிவு கூட மேலோட்டமாகப் பார்த்தால் அப்படித்தான் தெரியும், ஆனால் ஏதோ என்னால் முடிந்தவரை இரு தரப்பு மனோபாவங்களையும் எனக்குத் தெரிந்தளவில் சிறிதே அலச முயன்றிருக்கிறேன். கரணம் தப்பினால் மரணம் தான். சமீபத்தில் கூட ஒரு பிரபல பதிவர் இவ்வாறு முயன்று பல அவதூறுகளை வாங்கிக் கட்டியிருந்தார். அவரது நிறுவனமும் சம்பந்தமேயில்லாம தூற்றப்பட்டது. இருந்தும் விதி யாரை விட்டது..? பார்க்கலாம்.

மே 2009 நடுப்பகுதி. இறுதிக்கட்டப் போர் தீவிரமாக நடந்துகொண்டிருந்த சமயம். இணையப் போராளிகள் தீவிரமாக முகப்புத்தகத்தில் போரிட்டுக் கொண்டிருந்த வேளையில் நானும் என்பங்குக்கு *NESOR அறிக்கையை எனது சுவரில் பகிர அங்கு நடந்த ரத்தக் களரி கீழே தரப்பட்டிருக்கிறது. தற்போது தான் கவனித்தேன் அந்த சகா தனது பின்னூட்டங்களை பிழை உணர்ந்தோ என்னமோ தற்போது அகற்றியிருக்கிறார் / என்னை பிளாக் பண்ணியிருக்கிறார். ஆனாலும் எனது ஜிமெயில் இல் தேடியபோது கிடைத்து. ஆனால் இன்னொரு ரத்தக் களரியை பார்க்க விரும்பாததால் இங்கே அவரது பெயர் மறைக்கப்பட்டிருக்கிறது.

(* NESOR அறிக்கை என்பது 2009 வரையான தமிழர் மீதான வன்முறை / படுகொலைகள் தொர்டர்பான விபரமும் அவை எங்கு நடைபெற்றன என்பது தொடர்பான ஓர் (முழுமையற்ற) ஆவணப்படுத்தல் அறிக்கை. )

H+++m U+++f commented on your status:

"NESHOR (Nice catchy name) Another Bogus Front Org like the TRO, BTF, BTA, WTM, THR, White Pigeon etc. etc. All for Collecting money for Arms & Comfy lives for the Megalomaniac Murderer Prabakaran & Selfish Tamil Diaspora (Economic Refugees - Just like U), thriving on the suffering of the Innocent Tamil Civilians held as human shields by the LTTE TERRORIST!

Just Look at it's F...ing logo, it has an Utopian PEelam Map... doesn't that tell a lot about the authenticity... impartiality... of it's reports ....LOL! Created to Siphon money, procure weapons & spread False Propaganda!"

Kajentheran Balasundaram Hello h+++m, waht happen in vavuniya camp?Did u see chanel4 vedio?If u tell they are pro LTTE media u are fool.wait and see man

H+++m U+++f commented on your status:
"Dear Kajan..... I don't know about you, but I ain't stupid to believe orchestrated False Propaganda and LTTE Paid "Journalist" Maggots!

Any one with a Brain knows how much the LTTE spends on their carefully planed False Propaganda Dissemination Campaign and How the Media Circus jump into the Feeding Frenzy! There is ample proof of how the LTTE sympathisers have infiltrated the Media, NGOs & "Humanitarian" Business Conglomerates!"


இடையில் இன்னும் சில நண்பர்கள் பின்னூட்டத்தில் வந்து இரத்தக் களரி அதிகமாவதை உணர்ந்து குறுக்கிட்ட நான் அதற்க்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.


Gowri Ananthan Hi H+++m, 
I'm not against to anyone.. even to Sinhalese.. I know Muslims also have the same pain as Tamils.. its just a way of expressing our pain.

I totally agree with what Theepan said, "From my recollection of incidents that took place in my lifetime and stories that happened as we grew up, the document seems to have recorded the incidents.." if you just go through the article, then you will definitely realize it is prepared not with the intention of harming others, but to document what has happened to us. 

we do not have rights to express our pain, even if we try, then immediately labeled as LTTE. so please keep LTTE aside, and please think of our people who are suffering just for no reason. we need your help.. they need your help.. its time for everyone to think about humanitarian.. 

BTW up to my knowledge, Singapore does not give any refugee Visa until now.. 


தவறு செய்தது ஒரு சிலர் தானே அதற்கு பொதுப்படையாக முழு சமூகத்தையும் குறை சொல்ல வேண்டுமா என்று பலர் கேட்கலாம். அதே போல் தான் சிங்களவர்களும் சொல்கிறார்கள். ஒரு சில சிங்களவர்கள் தானே தாக்குகிறார்கள் என்று. அதனால் தாக்குதல் என்பதுவும் இழப்பு என்பதுவும் இல்லாமலாகிவிடுமா? அவர்கள் ஆயுதம் கொண்டு தாக்குகின்றனர் எனில் மீதிப்பேர் மௌனமாக இருந்து அதை ஆமோதிக்கின்றனர். விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசிலரே எதிர்க்கின்றனர். அவ்வாறு எதிர்ப்பவர்களும் மறுநாளே காணாமல் போகின்றனர் அல்லது காணாமல் போகச் செய்யப்படுகின்றனர். 

சரி. இதை இப்ப இங்க சொல்லவேண்டிய அவசியம் என்ன? பழிக்குப் பழியா?
ஏற்கனவே சீழ் வடிஞ்சிட்டிருக்கிற புண்ணில ஏன் மேலும் மேலும் கிண்ட வேண்டும்?

முதலாவதாக இதை இங்க சொல்ல வேண்டிய அவசியம் வந்ததன் காரணம், அன்று தமிழர்கள் அடிவாங்கியபோது, அது சரியே என்று அரசாங்கத்தின் பக்கம் நின்று (பாராளுமன்றத்தில் சுமந்திரன் பேசும் ஒவ்வொருமுறையும் சம்பந்தமேயில்லாமல் அடிக்கடி குறுக்கிட்டு தனது விசுவாசத்தைக் காட்டும் ஒரு அமைச்சர் போல) அவர்கள் கேட்காமலேயே வாதாடியவர்கள் தான் இன்று தமக்கு ஒன்றென்றவுடன் எதுவுமே செய்யமுடியாத சூழலில் இருக்கிறார்கள். அன்று எமக்காகக் குரல் கொடுங்கள் என்று நாம் ஒவ்வொருவரும், ஒவ்வரிடமும் கெஞ்சி அழுததுபோல் எனக்குத்தெரிந்து எவரும் இதுவரை யாரிடமும் கேட்டதாகத் தெரியவில்லை. ஏன் அன்று தொண்ணூறுகளில் கூட.. என்னைப் பொருத்தவரை அவர்கள் நம்புவது முதலாவது கடவுளை.. அடுத்தது தன்னை.. தம்மை.. 

இது இப்படியிருக்க இன்றுவரை யாராவது வந்து எமக்குத் தீர்வு பெற்றுத் தருவார்கள் என்று வாசலையே இமைகொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும் நாம் போய் அவர்களுக்கு ஆறுதல் கூறுகிறோம், கொதித்தெழுகிறோம் அல்லது யார் முதலில் அரவணைப்பது என்று நமக்குள் அடிபட்டுக் கொள்கிறோம். வேடிக்கையாகவில்லை..? (ஆணியே புடுங்க வேண்டாம்)

அப்போ கவலை தெரிவிப்பது மற்றும் அதனைப் பகிர்வது தவறாகுமா? இல்லை. ஆனால் அப்படிச் செய்துவிட்டதால் நீங்கள் மகாத்துமா ஆகிவிட்டதாய் நினைத்து மற்றவர்களை வசை பாடாதீர்கள். அவர்கள் ஒட்டுமொத்த தலைமையும் மௌனமாக இருந்து ஆமோதிக்கும் போது, ஜெனீவா தீர்மானத்தை வைத்து பகடையாடும்போது நீங்கள் யாரை வைத்து யாரிடம் நீதி கேட்கிறீர்கள்? முதலில் சரியான தலைமைத்துவத்தை உருவாக்கட்டும். அதற்க்கு ஏதாவது செய்யமுடியுமா என்று பாருங்கள். அவர்களை கேள்வி கேளுங்கள். சரியோ பிழையோ ஒரு ஜனநாயக(?) நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களின் நிலையே மக்களினதும் நிலையாகும்.

சீழ் கட்டிய புண்ணுக்கு வைத்தியம் பார்ப்பதக்கு அதை கிண்டித்தான் ஆகவேண்டும். 



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்