முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

எண்ணெய் காவிகள்


பதினெட்டடி ஆழக்கிணறு
பளிங்கு போன்ற நீர்
பாதிக்கும் மேல் நிறைந்திருக்கும்
அமிர்தம் இதுவோ என வியப்பர்
யார் கண்பட்டதோ..?

அன்றொரு நாள்
தாகம் என்று வந்தவர்க்கு
குடத்தில் நீர் கொடுத்தால்
நம்ப மறுத்து
செவ்விளனி நீரென்று
வாதிடுகையில்
கூட்டிச் சென்று
துலா பிடித்து நீரள்ளி
குடிக்கக் கொடுத்தோம்

அதிசயித்தவர்
காரணம் கேட்கையில்
செல்லும் வழியில் எங்காவது
நன்னீர்க் கிணறு இருப்பின்
இரவோடு இரவாய்
தூக்கிவந்துவிடுவோம் என்று
நக்கலாய் சொன்னதை
நம்பிச் சென்றவர் எம்மைப் பின்
'கிணறு காவிகள்'
ஆக்கி விட்டார்..

அவர் இன்று வந்திருந்தால்
பூரித்துப் போயிருப்பார்
மத்திய கிழக்கிலிருந்து
தூக்கிவந்துவிட்டதாய்..



Click here for the Full news on this issue 


நம் ஊர்.. நம் கிணறு.. ஆனால் இதுவரை இந்தப் பிரச்சினைக்காக ஒன்றையும் செய்ய முடியவில்லை.. இது சம்பந்தமா ஒரு ஆவணப்படம் எடுக்கும் நோக்கத்தினை பல மாதங்களின் முன்பு முன்வைத்தேன். இருந்தும் சில பல அரசியல் காரணங்களால் கைகூடவில்லை. ஊடகங்கள் பல இருட்டடிப்புச் செய்த போதிலும் இன்று பல இளையோர்களின் முயற்ச்சியினால் இது வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது. எமது உரிமையை காக்க நாம் தான் நேரடியாக களத்தில் இறங்கவேண்டும் என்பதனை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார்கள். வாழ்த்துக்களுடன் மனமார்ந்த நன்றிகள்.








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்