முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

Featured post

இணையத்தில்.. (Click here)

கௌரி அனந்தனின்  கனவுகளைத் தேடி  மற்றும்  பெயரிலி  நாவல்களை Kinddle ல் பெற கனவுகளைத் தேடி / Kanavukalaith Thedi (Tamil Edition)   by Gowri Ananthan Link:   https://www.amazon.com/dp/B06XDZWNMJ பெயரிலி / Peyarili (Tamil Edition)   by Gowri Ananthan Link:  https://www.amazon.com/dp/B06XF1YQD4

தேவதாசி: அங்கவர்ணனை


எவரனி திருமனசே..!

அரனிடை நெடில் வந்து  
மயூரனிடை சேர்ந்திட  
உதித்ததோர் மோகினியாம்
உரைக்குமின் கதைகேளீர்!



அங்கவர்ணனை 

அஷ்வதீப ஒளிதனில்   
மின்னிடும் வளர்னுதலாம்  
தாரை பதியோவென 
மயங்குமோர் தேவதாசி

கரும்திரையூடும் காந்தமென  
கவர்ந்துதிழுக்கும் கண்கள்
கண்ண னிவனோவென
மயங்குமோர் தேவதாசி 

பவளமோ முத்தோ 
பரிகசிப்பது வோவன்றி 
பச்சிளம் சிரிப்போவென 
மயங்குமோர் தேவதாசி

பட்டும் படாதுமே
தொட்டுச் செல்லுமிதழ்கள் 
முட்களை உரசிடத்தானோவென
மயங்குமோர் தேவதாசி

மிஞ்சிய இறகுகளில் 
இயற்கை வண்ணங்களில் 
குயிலோவிலை மயிலோவென 
மயங்குமோர் தேவதாசி

மேல்வருடும் மென்விரல்கள் 
மதுதரும் கரும்போவிலை  
மதுசூதனன் குழலோவென 
மயங்குமோர் தேவதாசி

திண்ணிய தோழ்களிலே
தாவிடும் மனசறிந்து
தழுவிடானோ வென
மயங்குமோர் தேவதாசி



***** 
தொடரும்..

கருத்துகள்

மன்மதகுஞ்சு இவ்வாறு கூறியுள்ளார்…
இந்த வரிகளுக்கு உரிமையாளர் ???? அழகான இலக்கிய நடை, பெண்ணைப்பற்றிய வர்ணனையில் நான் சிலாகித்தது கண்ணதாசனும்,சாண்டில்யனும் மட்டுமே... இங்கே நிறைவான அங்கமும் ஊடலும் கலந்த போதைத்தேனாக வரிகள்...
Gowri Ananthan இவ்வாறு கூறியுள்ளார்…
//இந்த வரிகளுக்கு உரிமையாளர் ????//
அடியேன் தானுங்கோ..
//அழகான இலக்கிய நடை, பெண்ணைப்பற்றிய வர்ணனையில் நான் சிலாகித்தது கண்ணதாசனும்,சாண்டில்யனும் மட்டுமே...//
யாமும் சாண்டில்யன் பரம ரசிகையே. :)
//இங்கே நிறைவான அங்கமும் ஊடலும் கலந்த போதைத்தேனாக வரிகள்...//
நன்றி. ஒரு பெண்ணை ஒரு ஆண் அங்குல அங்குலமாக ஆராய்ந்து வியந்து சற்றே காமமும் கலந்தே விபரித்தால் அவன் கவிஞன். ஆனால் அதையே ஒரு பெண் செய்யும்போது அவள் தாசியாகிவிடுகிறாள். என்ன செய்வது? :(

பிரபலமான இடுகைகள்